Wednesday 23 April, 2008

ஆனந்தம் பேரானந்தம்...

ஆனந்தம் பேரானந்தம்
அகமெல்லாம் அருளானந்தம்
இதயத்தில் எழுந்தவர் -என்
இயேசுவாதலால் இவ்வானந்தம்.

தகுதியில்லாத என்னகம் எழுந்து
தந்தார் எனக்கும் ஆனந்தம்
கிடைப்பதர்க்கரிய இவ்வானந்தம்
தந்தவர் அவரை ஆராதிப்போம்.

என்னையே மாற்றி இறைமகனாக்கிட
தன்னையே தந்தார் இறைவனவர்
அவர்பதம் பணிந்து -சரண்
அடைவோமேனில் மீட்படைவோம்.
1980

No comments: