Monday 21 April, 2008

ஜூபிலிப்பாடல்

சிறியதுறைஎனும் சீர்மிகு கிராமம்
அலைகடல் கொஞ்சும் அழகிய கிராமம்
பங்கேனப்பிரிந்து திருச்ச்சபையாகி
ஐம்பதுவருட ஜுபிலீநாளில்...

எக்காளம் முழக்கி கொண்டாடுவோம்
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம்
தொடங்கிய பயணம் தொடர வாழ்த்துவோம்!

கொண்டாடுவோம் இன்று
பொன்விழா வந்ததென்று
பண்பாடுவோம் பாரில்
சிரியதுரை வளர்ந்ததென்று ...

கொட்டுமேளவும் தட்டுகைகளும்
எட்டுத்திக்கிலும் எதிரொலிக்க...
கொண்டாடுவோம் ...

படைப்பெலாம் முடித்த பரமதந்தை
கலைப்பட்கட்ட கடைசி நாளில்
ஓய்வெடுத்தார் ஓய்ந்திருக்க
பணித்தார் அதையே மனிதனுக்கும்.

ஓய்வின் ஆண்டாம் ஏழாம் ஆண்டில்
மண் மா மனிதனும் ஓய்ந்திருந்தால்
வந்திடுமே வளமான சுபிலீ ஆண்டு.

அருள்தரும் இந்த ஆண்டினையே
சங்கேனமுழங்கி பறைசாட்ர
ஆண்டவர் ஏசு அனுப்பப்பட்டார்
ஆதலால் மகிழ்ந்து பாடிடுவோம்.

ஆண்டான் அடிமை இல்லாதபோது
அனைவரும் அன்பு சோதரறாய்
படைத்திடுவோம் சமதுவபுரமாம்
இறை அரசையே!

No comments: