Wednesday 23 April, 2008

உண்மை தேடும் உள்ளங்களே...

உண்மை தேடும் உள்ளங்களே
உறவே அதுவென்று உணருங்களே
உறவில்லாதொரு உயிர் வருமோ?
உயிரில்லாதது உலகாமோ?

உள்ள நிலை உண்மை நிலை
இல்லையெனில் பொய்மை நிலை
உள்ளநிலை உணர்வதர்க்கே
உயிரொன்று வேண்டுமன்றோ?

உணர்ச்சியின்றி உறவுண்டா?
உறவின்றி உயிருண்டா?
உயிரின்றி உலகுண்டா?

உயிரினை என்றும் கொண்டாடுவோம்
உயிரினை இன்றே மதித்திடுவோம்.

No comments: