Wednesday 23 April, 2008

இசைத்தமிழே...

இசைத்தமிழே உனை புகழ்ந்திடவே
இயற்றிடுவேன் புது கவிதை பல
கவிதைக்கு பண் அமைப்பேன்
அதை தாளமுடன் பாடிடுவேன்.

கேட்பவர்கள் உருகிடவே-அதை
இனிமையுடன் இசைத்திடுவேன்
தமிழிசையின் இயல்பிதென-பிறர்
மொழிந்திடவே வாழ்ந்திடுவேன்.

இயலுடனே இசை வளர்த்த தமிழினமே
இன்றுன் இசைத்தமிழின் நிலை என்ன?
தமிழிசைக்கு குரல் கொடுக்க வேறுபலர்
வந்த நிலை அவல நிலை இல்லையன்றோ?

தொன்மையுள்ள தமிழிசைக்கு
தரணியில் நிகர் எதுவுமில்லை
தன்மானம் குறையாமல்-அது
தழைத்தோங்க பாடுபடு.
1980

No comments: