எழுந்தருளே என்னகத்தே-எந்தன்
எழ்மையினை போக்கிடவே
வந்தருள வையகத்தே -அதன்
வருமைகளை விரட்டிடவே.
பாவத்தை பலமாக பகைத்திருந்தும்
பாவிகளை பரிவுடனே பார்ப்பவனே
மனம் நொந்து மன்னிப்பு பெற்றுவிட்டால்
மறுக்காமல் வருவாயா என்னகத்தில்?
வரவேண்டும் என்னகத்தே
தரவேண்டும் அருட்கொடைகளை
வரவேண்டும் அவனிதனில்
தரவேண்டும் அமைதிதனை.
1977
Tuesday 22 April, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment