Wednesday 23 April, 2008

இன்றுவரை இயன்றளவு பாடுபட்டோம்...

இன்றுவரை இயன்றளவு பாடுபட்டோம்
இறையரசை இதுவரையும் நழுவவிட்டோம்
இயேசு சொன்ன இறவாத வார்த்தைகளை
இழந்ததனால் இப்படியே இருந்துவிட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டேன்று கொண்டாட
இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி
இனியேனும் முயன்று விட்டால் அதுவேபோதும்
இறையரசு தானாக தழைத்துவரும்.

இறையரசை இயக்கமாக இயேசு தந்தார்
இயக்கத்தை அமைப்பாக்கி சபை என்றோம்
அமைப்பதிலே அதிகாரம் இயல்பாக
அதை நாமோ இயேசு இல்லா சபைஎன்றோம்.

கொடியோடு சேராத திராட்சைஎல்லாம்
வரண்டுபோக வாழ்விழந்து நிர்க்குமன்றோ
அதுபோல iஇயேசு இல்லா சபை கூட
அவனியிலே அர்த்தமின்றி போகுமன்றோ
1998

No comments: