Wednesday 23 April, 2008

இதையக்கோவிலில்...

இதையக்கோவிலில் எழுந்துவா-என்
இதையவீணையை மீட்டவா
இன்னல் அனைத்தும் நீக்கவா
இன்பச்சுடரை ஏற்ற வா.

அமைதி இன்றி அலைகின்றேன்
அழிவை நோக்கி செல்கின்றேன்
அடைக்கலம் ஒன்றே கேட்க்கின்றேன்
அடியேன் எனையே தருகின்றேன்.

ஏழை எனையே ஏற்றிடுவாய்-என்
ஏழ்மைதனையே மாற்றிடுவாய்
ஏற்றம் பெற்றிட செய்திடுவாய் -என்
இயேசுவே எழுந்து வந்திடுவாய்.
1980

No comments: