Thursday 24 April, 2008

மண வாழ்த்து...


இரவு பதினொன்று மணிக்குமேல்...
பழக்கமில்லாத குரல் மறுமுனையில்...
அதுவும் பெண்குரல்...!

பதட்டம் தீர்க்க 'பபிதா' என்றது
வியப்பைச்சேர்க்க 'திருமணம்' என்றது.

நிமிட நேரத்தில் நிலைவலைகள்
தூதூருக்கு தூக்கிச்செல்ல
பபிதா, லூசியா மற்றும் சின்னம்சிறுமலர்கள்
சிரித்து விளையாடி 'இறையரசு 'தங்களதெ'ன
சாற்றுவதை வியந்து நிற்க...

'புதுநன்மைக்கு வரவில்லை, பரவாயில்லை,
புதுவாழ்க்கை, மணவாழ்க்கை தொடங்கிவைக்க
வாருங்கள், வாழ்த்துங்கள்' என்றாயே.

நினைத்தாலும் நிறைவேற்ற முடியாத
நிலையில் நானம்மா, புரிந்துகொள்க
நிச்சயம் நானிருப்பேன் உங்களுடன்
உள்ளத்தால் உயரிய செபத்தால்.

சிவமின்றி சக்தியும், சக்தியின்றி சிவவுமில்லைஎன
சிவசக்திசெரூபன், அர்த்தநாரீஸ்வரன், அம்மையப்பனாக
உமையை சரிபாதியாக்கிய உமாபதிபோல்
பபிதாபதி ஜூலியஸ் உன் துணையாக.
2006

No comments: