Tuesday 19 August, 2008

எண்துறை என்துறை !


எண்துறையே என்துறையே

எண்ணமெல்லாம் இத்துறையே

எழுச்சிபெறக் காத்திருக்கும்

எழிலான துறையிதுவே.


நீர்நடுவே நிலமிருந்தால்

தீவென்பர் தீந்தமிழில்

நாற்புறமும் நீர்சூழ

தீவாகி நின்றாயே நிறைந்து.


தாய்மொழியாய் தமிழிருக்க

அரசமொழி வேறேனவே

அதைப்படிக்கும் கட்டாயம்

முன்னோர்க்கு நேர்ந்ததுவே.


தாய்மொழியே அரசு மொழியானபின்னும்

ஆண்டவனைப் போற்றுதற்கு

அம்மொழிக்கு இயலவில்லை

அதுவன்றோ நமது நிலை.


நிலமதிலே பிறந்தாலும்

நீர்தானே பிழைப்பெமக்கு

மீன்பிடித்து வாழ்கின்றோம்

மீள இது போதுமென்றோம்.


உலகமயம், வியாபாரம், லாபமென

மீன்தொழிலில் போட்டிவர

தொழில்நுட்ப துணையின்றி

தொலைந்திடுவோம் என்றுணர்ந்தோம்.


தொழில்நுட்ப துணையுடனே

தொலைதூரம் தாண்டிசென்றும்

மீன்வளம் கரைசேர்த்தோம்-நமை

மிஞ்ச இனி எவருண்டு?


உலகமய மேடையிலே முன்னேற

உழைப்புமட்டும் போதாது

உரியகல்வி பெறவேண்டும்

உயரவழி காணவேண்டும்.


காலம் கடந்து மட்டும் கல்விபெற்றோம்

காலம்தாழ்த்தாமல் உயர்ந்துவிட்டோம்

கடல்தாண்டி கண்டங்கள்தாண்டி

'கனவுல'கிலும் வந்துவிட்டோம்!


'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'

வையகம் தொடங்கட்டும் ஊரில் உறவில்

எண்துறையில் எம்துறையில் தொடங்குவோம்

எம்மவரில் நனவாக்குவோம் நம் கனவுகளை.


இதற்கு வடிகாலாக்குவோம் 'எண்துறை'யை

இருள்நீக்கும் விடியலாக்குவோமிதை

கிறிஸ்துமஸ்-புதுவருட பரிசெனவே

நம்மவர்க்களித்திடுவோம் 'எண்துறை'யை.

௨௩.௧௨.௨00௭



Saturday 16 August, 2008

Belief...

"I believe in the sun even when it is not shining. I believe in love even when i feel it not. I believe in God even when he is silent." [an inscription seemingly written by a fugitive Jew on the wall of a basement of a bombed-out house in Cologne, Germany where he might have been hiding from the Nazis during the World War II]

Blessing of the Sea...

Several parishes in the Diocese of Camden celebrate the annual 'Wedding and Blessing of the Sea.
The ceremony is popular, centuries-old rite in many European sea-coast cities and towns like Venice, as well as towns along the Jersey shore.
According to tradition, the Wedding and Blessing of the Sea commemorates an event that happened to the bishop of Cervia, Italy, who eventually became Pope Paul II. The bishop is said to have been returning to Venice by ship on the feast of the Assumption in 1455 when he became caught in a storm. It is said that the bishop calmed the storm through prayer, and by throwing his pastoral ring into the sea. [Catholic Star Herald, August 15, 2008. p.7]

Friday 15 August, 2008

காந்திஜியும்... மதுரையும்...

அரை ஆடை விரதம் மற்றும் அரிஜன கோவில் பிரவேசம் முதலியன தொடங்க மதுரைதான் காந்திஜிக்கு காரணமாக அமைந்தது:
ரவுலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரகம் செய்ய தொண்டர்களை திரட்ட ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பத்தொன்பதாம் ஆண்டு மார்ச்சு மாதம் இருபத்திஆறாம் தேதி மதுரை வந்தார். இருபத்திஎட்டாம் தேதி வரை மதுரை வீதிகளில் பிரச்சாரம் செய்தார். பிறகு இரண்டாயிரத்து இருபத்தியொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகவும் மதுரை வந்தார். அன்றிரவு தங்குவதற்காக மேல மாசி வீதியில் கருமுத்து தியாகராஜர் செட்டியார் இல்லத்தில் தங்க வரும் வழியில்தான் பாமரமக்கள் வறுமையில் வாடுவதை கண்டார். இதனால் மனம் வெதும்பிப்போன காந்திஜி , மறுநாள் இருபத்திரண்டாம் தேதி, "வறுமையில் தவிக்கும் பாமரர்களில் நானும் ஒருவன்" என்பதை வெளிக்காட்ட 'அரை நிர்வாண விரதத்தை' இந்த வீட்டில் இருந்துதான் மேற்க்கொண்டார். அரை நிர்வாணமாக முதல் முதலாக முனிச்சாலை பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்த இடம்தான் இன்று "காந்தி பொட்டல்" என்றழைக்கப்படுகிறது.
சுதேசி காதர் இயக்க பிரச்சாரத்திற்காக நிதி திரட்ட மீண்டும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி இருபத்தியேழாம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தியெட்டு முதல் முப்பது வரை மதுரை வந்தார். அகில இந்திய அரிஜன யாத்திரையின் போது ஆயிரத்திதொள்ளாயிரத்தி முப்பத்தினாலாம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்திஐந்தாம் தேதி மதுரை வந்தார். அவரது எழுச்சி உரையினால் தான் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தியொன்பது ஜூலை எட்டில் வைத்தியநாத அய்யர், காமராஜர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயிலில் அரிஜன பிரவேசம் நடந்தது. தொடர்ந்து வந்த வழக்குகளை சமாளிக்க ராஜாஜி அரிஜன பிரவேசம் செல்லும் என்ற அவசர சட்டத்தை கொண்டுவந்தார். இதை தொடர்ந்து பழனி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற முக்கிய கோயில்களிலும் பிரவேசம் நடந்தது.
பனிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அயிரத்திதொள்ளாயிரத்தி நார்ப்பத்தியாறாம் ஆண்டு பிப்ரவரி ரண்டாம் தேதி வழிபட மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காந்திஜி வந்தார். இத்தகைய தொடர்பு காரணமாக அவர் இறந்தபிறகு முதன் முதலில் இந்தியாவிலேயே அவருக்கென மியூசியம் அமைக்கப்பட்டது. இங்கு அவர் பயன்படுத்திய மூக்குகண்ணாடி, ராட்டை, ரத்தக்கறை படிந்த காதர் துண்டு உட்பட பதினான்கு பொருட்கள் பாதுகாக்கபட்டுவருகிறது.

Thursday 14 August, 2008

Laugh and relax..

* After christening of his baby brother in church, Jason sobbed all the way home in the back seat of the car. His father asked him few times what was wrong.
Finally, the boy replied, "That preacher said he wanted us brought up in a Christian home, and i wanted to say with guys."
** A Sunday school teacher asked her children as they were on the way to church service, "And why is it necessary to be quiet in church?"
One bright little girl replied, "Because people are sleeping."
*** A mother was preparing pancakes for her sons, Kevin 5, and Ryan 3.
The boys began to argue who would get the first pancake. Their mother saw the opportunity for a moral lesson.
'If Jesus were sitting here, He would say, 'Let my brother have the first pancake, i can wait.' Kevin turned to his younger brother and said, 'Ryan, you be Jesus!'
****A father was at the beach with his children when the four-year-old son ran up to him, grabbed his hand, and led him to the shore where a seagul lay dead in the sand. 'Daddy, what happened to him?' the son asked.
'He died and went to heaven,' the dad replied.
The boy thought a moment and then said, 'did God throw him back down?'
*****A wife invited some poeple to dinner.
At the table, she turned to their six-year-old daughter and said, 'would you like to say the blessing?'
'I would not know what to say,' the girl replied.
Just say what you hear mommy say,' the wife answered.
The daughter bowed her head and said, 'Lord, why on earth did i invite all these people to dinner?'
******One day my mother was out and my dad was in charge of me. I was may be 2 1/2 years old and had just recovered from an accident. Someone had given me a little 'tea set; as a get-well gift and it was one of my favorite toys. Daddy was in the living room engrossed in the evening news when i brought daddy a little cup of 'tea', which was just water. After several cups of tea and lots of praise for such yummy tea, my mom came home.
My dad made her wait in the living room to watch me bring him a cup of tea, because it was 'just the cutest thing!' My mom waited, and sure enough, here i come down the hall with a cup of tea for daddy and she watches him drink it up.
The she says, (as only a mother would know...:)
'Did it ever occur to you that the only place she can reach to get water is the toilet?

Tuesday 12 August, 2008

ஒரு பள்ளிக்கூடமும் ஆறு மரணங்களும் சில அவலங்களும்...[தொடர்ச்சி-௨]

பிறகு எத்தனையோ அமர்வுகள் நடந்தும் ஒன்றும் நடக்காதபோது, ஆயரின் ஒன்றுக்கு ஒன்று என்ற விகித அடிப்படையில் பணி நியமனம் நடத்த மேலாளராகிய நான் பள்ளியின் நலன் கருத்தில்கொண்டு கட்டாயப்படுத்தப்பட்டேன். எனவே, தூத்தூரில் உடல்பயிற்ச்சி ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாததாலும், அதே பணிக்கு சின்னத்துறையில் மூன்றுபேர் இருந்ததாலும் அவர்களை அந்த பணியிடத்திற்கு ஆள் தருமாறு கேட்டு கடிதம் பல எழுதியும் பதில் எதுவும் தராததால் ஐந்து மாதங்களுக்கு பிறகு அக்டோபர் மாதம் சின்னத்துறையை சார்ந்த வயதும் பணி அனுபவமுமுடைய ஒருவரை நியமித்தேன். இன்னொரு பணியிடத்தை தூத்தூரிலுள்ள தகுதி வாய்ந்த ஒருவருக்கும் கொடுத்தோம்.
அன்றே இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆயர், தூத்தூர் பங்கு தந்தை, பள்ளி தலைமை ஆசிரியர், புதிதாக நியமிக்கப்பட்ட இரு ஆசிரியர்கள் என ஐந்துபேரை பிரதியாக்கினர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே அவ்வப்போது தொல்லைகள் பல கொடுத்துவந்தனர். இவற்றில் சில போலீஸ் நிலையங்கள் வரை சென்றதுண்டு.
இதன்பிறகு நடந்த சுற்றுலாவிற்கும் சின்னத்துறை பங்குத்தந்தை வரவில்லை.
இப்படியிருக்க, ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நாலாம் ஆண்டு ஜனவரி மாதம் தூதூரில் ஸ்டீபன் சாமியாரின் தாய் இறந்துபோக அடக்கவந்த ஆயரிடம், "இந்த பிரச்சினைக்கு முடிவு எடுக்காத நிலையில் என்னை அங்கேயிருந்து மாற்றும்படி கேட்டும் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். அன்றுதான் பள்ளி ஆண்டு விழாவும்கூட. இதற்க்கு கொடிஏற்ற வேண்டிய சின்னத்துறை பங்குத்தந்தை வரவில்லை. அதற்க்கு பதிலாக அங்கிருந்து ஒரு கும்பல் வந்து பள்ளி வாயிலில் வைத்திருந்த அலங்காரங்களை கிழித்தெறிந்து அலங்கோலப்படுத்தினார்கள். இந்த நிலையில் ஆண்டு விழா நடத்துவது நல்லதல்ல என்று ஆசிரியர்கள் ஒன்றாக கேட்டுக்கொண்டதால் விழா மாறறிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒருகூட்டம் மாணவர்கள் போராட்டமும் நடத்தினர்.
ஏறக்குறைய ஒரு வாரத்திர்க்குபிறகு தூத்தூரில் ஆகத்தம்மாள் குருசடி திருவிழா நடந்துகொண்டிருக்க, விழா நாளான பெப்ருவரி மாதம் ஐந்தாம் நாள் காலையில் தூத்தூரிலுள்ள ஒரு கல்யாணம் காஞ்சம்புரம் கோயிலில் நடக்கவுள்ளதால் அங்கே போய்க்கொண்டிருக்கும்போது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியது. அவசரம் காரணமாக அவர்களும் பொருட்ப்படுத்தாமல் செல்ல, போலீஸ் தலையிடவேண்டிவந்தது. இதற்கும் மேலாக போலீஸ் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் இருக்கும்போதே மத்திய நேரம் ஒரு பெரிய கும்பல் ஆயுதங்களுமாக சற்றும் எதிர்பாராத தூத்தூர் மக்களை தாக்கினார்கள். எப்படியோ அவர்களும் நிதானித்துகொண்டவர்கள்போல் வந்தவர்களை சுற்றிவளைத்து தாக்கியிருப்பார்கள்.

Monday 11 August, 2008

ஒரு பள்ளிக்கூடமும் ஆறு மரணங்களும் பிற அவலங்களும்...[தொடர்ச்சி. ௧]

இப்போதைய நெய்யாறறி்ன்கரை மறைமாவட்டத்திலுள்ள கீழாரூர் என்னும் பங்கில் பணியாற்றும்போது ஆயிரத்திதொள்ளாயிரத்தி எண்பத்தி ஐந்தாம் ஆண்டு சின்னத்துறை-தூத்தூர் பள்ளிக்கூட பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர சின்னத்துறைக்கு நான் போகவேண்டுமென்று ஆயர் கேட்டுகொண்டதால் அங்கு போகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. அப்போது தூத்தூர் பங்கில் சேவியர் அலெக்சாண்டர் இருந்தார்.
சின்னத்துறைக்கு நான் போனபிறகே, பங்கு பிரிவினையின்போது கிடைக்கவேண்டிய தொகையிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் முதல் முறையாக வாங்கிகொடுத்தேன். அவ்வப்போது அங்கு சில பிரச்சினைகள் வந்தபோதும் தாங்கிக்கொண்டேன். கடைசியாக இரவிபுத்தந்துறையுமாக கால்பந்து போட்டி சம்பந்தமாக நடந்த சண்டையில் ஒருதலைபட்சமாக நான் நிற்காததால் விமர்சனத்திர்க்குள்ளாகி அங்கிருந்து வெளியேறினேன்.
இதன்பிறகு வள்ளவிளையில் கொஞ்சம் நாள் இருந்தபோது அங்கே நடந்த ஆர். எஸ்.எஸ். சண்டையில் மாட்டிக்கொண்டு தவித்தேன். பிறகு எனது பாதுகாப்பு கருதி என்னை கொச்சுதுறை பாங்கில் போட்டார்கள். அங்கு நான்கரை வருட பணிக்கு பிறகு இப்போதைய நெய்யாறறி்ன்கரை மறைமாவட்ட வட்டவிளை பாங்கில் ஆறு மாதம் பணியாறறி்யபிறகு நான்கரை மாதங்கள் வாகமண் குரிசுமலை ஆசிரமத்தில் ஆன்மீக தேடலில் ஈடுபட்டேன்.
அங்கிருந்து திரும்பி வரும் நேரம் தூதூரில் பிரச்சினையாகி பங்குத்தந்தையர் இல்லாமலும், கோயில் பூட்டப்பட்டும் இருந்தபோது என்னை அங்கே அனுப்பி அந்த பிரச்சினையை தீர்த்துவைக்க கேட்டுக்கொண்டதால் அங்கும் போனேன். பிரச்சினை முடியவே, என்னையே அங்கே பங்கு பொறுப்பாகவும், பிறகு பங்குதந்தையாகவும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறறி ஒன்றாம் ஆண்டு நியமித்தனர்.
இதே வேளையில் சின்னத்துறையில் றோபின்சன் பங்குத்தந்தையாக இருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து மக்களையும் ஒருங்கிணைத்து பள்ளிக்கூடத்துக்கு புதிய இரண்டு கட்டிடங்கள் போட்டோம் -ஒன்று மாடி கட்டிடம். பிறகு வருடங்களாக இருந்துவந்த பள்ளிக்கூட பிரச்சினைக்கு ஒரு தீர்வு என்ற முறையில் தலைமை ஆசிரியர் பணி சின்னத்துறை செறாபின் ஆசிரியருக்கு என்றும் தாளாளர் மற்றும் மேலாளர் பதவிகள் தூத்தூர் பங்கு தந்தைக்கென்றும் இரண்டு ஊர் பங்குபேரவைகளினாலும் ஏறறுக்கொள்ளப்பட்டு, ஆயர் அவர்களாலும் உத்தரவாக்கப்பட்டது. இதன் பிறகு பள்ளிக்கூடம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.
றோபின்சன் பங்கு மாறியபோது சக்கரியாஸ் அடிகளார் சின்னத்துறைக்கு வந்தார்.
பள்ளிக்கூட விவகாரங்களெல்லாம் இரண்டு பங்கு பேரவைகளுமாக ஆலோசித்தே முடிவெடுக்கவேண்டும் என்பதால் அதற்கென ஒரு அமைப்பே இருந்தது. அதனுடைய தலைவர் சின்னத்துறை பங்குத்தந்தையும், செயலர் தூத்தூர் பங்கு தந்தையுமாவார்.
இப்படியிருக்க ஊதியம் இல்லா ஆசிரியர்களின் ஒரு பெரும் போராட்டம் தமிழ் நாடெங்கும் நடக்க அதில் எமது ஆசிரியர்களும் கலந்து கொண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் முடிவில் எழுநூற்றைம்பது பணியிடங்கள் மொத்தமாக அறிவிக்கப்பட்டன. அதில் ஐந்து எமது பள்ளிக்கும் தருவதாக சட்டமன்ற உறுப்பினர் திரு.சுந்தரதாஸ் உறுதி தர ஒரு பணியிடத்துக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்றும் சம்மதிக்கவேண்டி வந்தது.
முப்பத்தி ஐந்துக்கும் மேற்ப்பட்ட ஊதியமில்லா ஆசிரியர்கள் உள்ள எமது பள்ளியிலிருந்து ஐந்து பேரை தேர்ந்தெடுக்க ஒன்று:ஒன்று என்ற நியதி இருந்தபோதும் பணிமூப்பு அடிப்படையில் தூதூருக்கு ஒன்றும் சின்னத்துறைக்கு நான்கும் என்று முடிவெடுத்தோம்.
ஆனால் சில அரசியல் காரணங்களால் கடைசி இரண்டு பணியிடங்களும் கிடைக்கவில்லை. இதே வருடம் [ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறறி மூன்றாம் ஆண்டு] கடைசியில் இரண்டு ஆசிரியர்கள் ஓய்வுபெறறார்கள்- உடற்ப்பயிர்ச்சி ஆசிரியர் மற்றும் இந்தி ஆசிரியர்]. சட்டமன்ற உறுப்பினரின் உறுதிப்படி கிடைக்காமல்ப்போன பணியிடத்துக்கு பதிலாக இந்த இரண்டு பணியிடங்களையும் தரவேண்டுமென்று சின்னத்துறை அடம்பிடித்தது. ஆனால் இது சரியல்ல என்று தூத்தூரும் சொல்ல அதுவே ஒரு பிரச்சினையாகி ஆயரை அணுகினர். அவரும் ஒன்று:ஒன்று என்னும் விகிதப்படி நடத்துவதே சரி என்று சொல்லிவிட்டு தற்ப்போதைய பணியிடத்தை சின்னத்துறைக்கு கொடுத்தால் நல்லது என்றும் சொல்லி பிரச்சினையை முடிக்காமால் அதற்கே முடிச்சுபோட்டதுபோல் ஆக்கிவிட்டார்!
இப்படியிருக்க கிளாடின் சின்னத்துறை பங்குக்கு வந்தார். முன்போல் இரண்டு ஊர் பள்ளிக்கூட கமிட்டி அவ்வப்போது கூடி காரியங்கள் நடத்திவந்தது. இத்தகைய ஒரு கூட்டத்தில் தலைவரை மதிக்கவில்லை என்று கிளாடின் வருத்தப்பட, நானும் சாதாரணமாக "பிஷப் அச்சாருபறம்பிலையே மதிக்காதபோது, இந்த தலைவரையா?" என்று கூறியது அவருக்கு பிடிக்காமல் வெளிநடப்பு செய்தார். உடனேயே அவருக்கு பின்னால் ஆளை அனுப்பியபோது அவர் பங்கிற்கு செல்லவில்லை என்று புரிந்துகொண்டோம். அடுத்த நாள் காலையில் பூசை முடிந்ததும் அவரை பார்க்க சென்றேன். அப்போது என்னை சற்றும் பொருட்படுத்தவில்லை என்று மட்டுமல்லாமல் தரக்குறைவாக பேசவும் செய்தார். தொடர்ந்து நான் பள்ளிக்கூடம் வந்து அங்கிருந்த சின்னத்துறை ஆசிரியரும் எனது தமிழ் ஆசிரியருமான சேவியர் அவர்களையும் திமித்தியூஸ் ஆசிரியர் மற்றும் செராபின் அவர்களையும் தெரியப்படுத்துகையில் இப்படியும் சொன்னேன்: " அவரோடு இனி எந்த உறவும் இல்லை; அவர் போகும் மோட்சத்தைவிட நரகமே எனக்கு போதும்." இதன் பிறகு அவரோடு அதிக நெருக்கம் இல்லாமலே இருந்தேன். இதையே எங்களுக்குள்ள பெரும் பிரச்சினை என்றும், இந்த கசப்பே ஊர் பிரச்சினைக்கு காரணமென்றும் சொல்வது எவ்வளவு சரி என்று நீங்களே முடிவு செய்யுங்கள். [கிளாடினுடைய குருத்துவப்பயிர்ச்சி காலத்திலும் அதன் பிறகும் என்னோடு எப்படி இருந்தான் என்று தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியும். இதன்பிறகும், இப்போதும் அவன் என்னோடு எப்படி நடந்துகொள்கிறான் என்று பார்த்து சொல்லுங்கள். அவனது டாக்டர் பட்ட டிப்ன்சுக்கு உரோமையில் என்னை மட்டுமே அழைத்தான் என்றால், அதற்கான செலவுகளையும் அவனே செய்தான் என்றால் நான் என்னதான் சொல்ல தேவை இருக்கிறது?]

ஒரு பள்ளிக்கூடமும் ஆறு உயிர்களும் சில அவலங்களும்...

இன்று இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதினோராம் தேதி. தற்போது நான் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் நியூ ஜெர்சி மாநிலத்தின் கேம்டன் மறை மாவட்டத்தில் லிண்டன்வேல்டு பங்கில் தங்கி ஸ்டராட்பர்ட் கென்னடி நினைவு மருத்துவமானையில் கத்தோலிக்க குருவின் பணியாற்றுகிறேன்.
இப்படி இருக்க எனது சொந்த மறைமாவட்டமான திருவனந்தபுரத்திலிருந்து ஒரு நண்பர்-குருவானவர்- இங்கு விடுமுறைப்பணிக்காக வந்தபோது என்னை பார்க்கவும் வந்தார். அந்த சந்திப்பின்போது நடந்த உரையாடலில் தூத்தூர் பள்ளிக்கூட பிரச்சினையில் எனக்கும் கிளாடினுக்கும் இடையே உள்ள மனத்தாங்கல் தான் இத்தனைக்கும் காரணமென்று பலரும் செல்வதாக கூறினார். இதையே வேறு பலரும் சொல்ல நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே இதன் உண்மை நிலை சொல்லியாகவேண்டியிருக்கிறது. அதைத்தான் இங்கே முயற்ச்சிக்கிறேன். [தொடரும்...]

Friday 8 August, 2008

Thamiraparani River...



The Thamirabarani is one of only two perennial rivers in Tamil Nadu, the other being Cauvery. The great river like the Cauvery, but unlike most of the other Indian rivers, is fed by both the monsoons – the south west and the north-eastern and is seen in full spate twice a year if the monsoons do not fail.


Spelt differently as Tampraparani, Tamraparni, Tamiravaruni, etc., the river is mentioned as the Porunai nathi in Tamil poetic literature. It gets recognition and is referred to as the renowned one in Sanskrit literature references which are as old as that of the Puranas and Epics. The river has also been historically known as Podhigai.

It originates more than 2,000 metres above sea-level in Agasti Hill[Periya Pothigai hills], a part of the Aanamalai range on the eastern slopes of Western Ghats above Papanasam in the Ambasamudram taluk of the Tirunelveli district in Tamil Nadu, near the peaks of Aduppukkal Mottai, Agastya Malai and Cherumunji Mottai. It flows roughly east and enters the Gulf of Mannar of the Bay of Bengal near at Punnaikayal in Tiruchendur taluk of Thoothukkudi district. At 130km it is a relatively short river.

Mythology: The Tirunelveli Sthalapurana associates the origin of the river with sage Agasthiyar. It states that when Agasthiyar was requested by Lord Siva to move to the South, Parvathi Devi, the divine consort of Siva filled the sage’s font meant to hold water for poojas (kamandala) with the water from the Ganges and on his arrival at Pothigai, he released it and the water ran as Tamiraparani.

The Thamirabarani basin is situated between latitudes 8.21' N and 9.13' N and east of longitude 77.10' E. The 40 metre Vanatheertham waterfalls are located close to the origin of the main river. The Papanasam Reservoir is 16km downstream. It is fed both by monsoons and by its tributaries.

The river is mentioned in ancient Sangam and Tamil texts.[1] There is an ancient script written as Thamirabarani mahathmiyam.

It is the major river of Kanyakumari District and is locally known as Kuzhithuraiar. [It has got two major distributaries namely Kodayar and Paralayar. There are many distributaries for Kodayar River of which Chittar I and Chittar II and major ones.] It confluences with Arabian Sea at Erayumanthurai, near Thengapattanam, at a distance of about 56 Km. west of Cape Commorin, the southern most tip of India.

It drains an area equal to 1937 sq.miles. The valley of the river contains some of the richest lands in Tamil Nad. [Collected and edited from various sources in the internet]

AVM Canal


"...The excavation of a new canal from the South as far as Trivandrum was also sanctioned and the work was commenced in May 1860. It was designated 'Ananta Victoria Martanda Canal.' ... His Highness [Uttram Thirunal Marthanda Varma 1847-60] visited the South to commence the work of AVM Canal, when he fell ill and at once returned to the capital." (from Travancore Manuel by Nagamayya.) This project might have been taken up by the PWD organized under Mr. Collins, Civil Engineer, as its head.

ஒரு சோதனை முயர்ச்சி...

அன்பு தங்கையும் லாரன்சும் பிள்ளைகளும் அறிய,
தமிழில் கடிதம் எழுத ஒரு சுலப முறை முயல்கிறேன். பார்ப்போம். என்னுடைய மெய்ல்கள் எல்லாம் கிடைத்ததா? என் பதில் ஒன்றும் காணோம்?
பாங்கில் காசு பிரச்சினை முடிந்தது. லாரன்சுக்கு ஏதேனும் பிரச்சினை உண்டா?
வேறு என்ன விசேஷங்கள்?
நலமா இருங்கள்.
ஜெபிக்கிறேன், ஜெபிப்போம்.
அன்புடன்,
பங்கிராஸ்.

இறந்தபின் வாழ்த்து...

வாழ்ந்தபோது
வாழ துணை நின்றீர்
'வாழ்'விழந்து போகையிலே
வழியனுப்ப வந்துள்ளீர்!

நன்றி சொல்ல வார்த்தையில்லை
நலிவுற்ற இவ்வுடலே நன்றியென
நாளும் ஏற்பீர் நலமுடன் வாழ்வீர்
நினைவாலே நிலைவாழ்வடைவோம்.

Monday 4 August, 2008

I HOPE YOU DANCE


I hope you never lose your sense of wonder

You get your fill to eat but always keep that hunger

May you never take one single breath for granted

God forbid love ever leave you empty-handed


I hope you still feel small when you stand before the ocean

whenever one door closes I hope one more opens

Promise me that you'll give faith a fighting chance

And when you get the choice to sit it out or dance

I hope you dance... I hope you dance


I hope you never fear those mountains in the distance

Never settle for the path of least resistance

Livin' might mean takin' chances but they're worth takin'

Lovin' might be a mistake but it's worth makin'

Don't let some hell-bent heart leave you bitter

When you come close to sellin' out reconsider


Give the heavens above more than just a passing glance

And when you get the choice to sit it out or dance

I hope you dance... I hope you dance


Time is a wheel in constant motion always rolling us along

Tell me who wants to look back on their years and wonder

where those years have gone

I hope you dance... I hope you dance

I hope you dance
[Mark D. Sanders & Tia Sillers, (Rutledge Hill Press, Nashville, Tennessee, 2000)]