Tuesday 29 April, 2008

மீனவத்தலைவன்...

இயேசு கலிலேயா கடலோரமாய் சென்ற போது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களன அவர்கள் கடலில் வலை வீசி கொண்டிருந்தனர். அவர் அவர்களை பார்த்து, " என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரை பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரர் யோவானையும் அவர் கண்டார். அவர்கள் படகில் வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே அவர் அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவையும் கூலி ஆட்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள். [மாற்கு, ௧: ௧௬-௨0]

യേശു ഗലീലി കടല്‍ തീരത്തുകൂടെ കടന്നു പോകുമ്പോള്‍ ശിമയോനെയും അവന്റെ സഹോദരന്‍ അന്ത്രയോസിനെയും കണ്ടു. മീന്‍ പിടുത്തക്കാരായ അവര്‍ കടലില്‍ വല എറിയുകയായിരുന്നു. അവന്‍ അവരോട് പറഞ്ഞു: എന്നെ അനുഗമിക്കുവിന്‍; ഞാന്‍ നിങ്ങളെ മനുഷ്യരെ പിടിക്കുന്നവരാക്കും. ഉടനെ വല ഉപേക്ഷിച്ചു അവര്‍ അവനെ അനുഗമിച്ച്ചു. കുറച്ചു ദൂരം ആയപ്പോള്‍ സെബദിയുടെ പുത്രനായ യാക്കോബീനേയും അവന്റെ സഹോദരന്‍ യോഹന്നാനെയും കണ്ടു. അവര്‍ വഞ്ചിയിലിരുന്നു വലയുടെ കേടു പോക്കുകയായിരുന്നു. ഉടനെ അവന്‍ അവരേയും വിളിച്ചു. അവര്‍ പിതാവായ സെബദിയെ സേവകരോടൊപ്പം വള്ളത്തില്‍ വിട്ടു അവനെ അനുഗമിച്ച്ചു. [മാര്‍ക്കോസ്, ൧: ൧൬-൨൦]

गलिलिया के समुद्रू के किनारे से हो कर जाते हूए ने सीमोन और उसके भाई अन्द्रयास को देखा/ वे समुद्रू मे जाल डाल रहे थे, क्योम्की वे मछुवे थे/ ईसा ने उन से कहा, "मेरे पीच्चे चले आओ/ मै तुम्हे मनुश्योम्के के मछुए बनाॐगा/" और वे तुरंन्त अपने जाल कर उनके पीछे हो लिये/ कुछ आगे बढने पर ईसा ने जेबेदी के पुत्रू याक्कूब और बाई योहन को देखा/ वे भी नाव मे अपने जाल मरम्मत कर रहे थे/ ईसा ने उन्हें उसी समय बुलाया/ वे अपने पिता जेबेदी को मजद्दुरोम के साथ नाव मे छोड़ उनके पीछे हो लिये/ [मार्कूस, १: १६-२०]


சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா,கலிலேயாவிலுள்ள கானாவை சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், "நான் மீன்ப்பிடிக்கப்போகிறேன்" என்றார். அவர்கள் "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று போய் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிகைக்கவில்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள். அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள். மீன் கிடைக்கும்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச்சீடர் அதைக்கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்றார். அதைக்கேட்டவுடன் தம் ஆடையை களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மாற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், "நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீனகளை கொண்டுவாருங்கள்" என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையை கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. [யோவான் ௨௧: ௨-௧௧]



No comments: