Wednesday 23 April, 2008

பிறந்த நாள் வாழ்த்து...


அமுதா கண்ணே
ஆசை மகளே
இன்றுனது பிறந்தநாள்
ஈங்கிதோ மாமன்
உளமார வாழ்த்துகிறேன்
ஊர்புகழ வாழ்க
என்றும் சிறக்க
ஏற்றம் பெறுக
ஐயம் தவிர்க்க
ஒற்றுமை போற்றுக
ஓங்கி வளர்க
ஔவை போலாக.


கண்ணே அமுதா கலங்காதே
கடவுள் காப்பார் தயங்காதே
காலம் வரும் காத்திரு
கடமை செய்து விழித்திரு.

பெண்மை உணர்ந்தாய் -அதன்
உண்மை அறிந்தாய்
உறவை தேர்ந்தாய்-அந்த
உலகை ஆலவாய்

பசி தெரியாத பிள்ளை நீ
பாசம் பருகிய பாவை நீ
மனமேலாம் வெள்ளை நீ
மாசில்லா மங்கை நீ.

கருணை உனது கவசமாக
கனிவு உந்தன் வார்த்தையாக
தெளிவு நின் சின்தையாக
உறுதி நின் செயலிலாக.
2008


No comments: