Tuesday 16 February, 2010

வெட்டுகாடு

பதினாலாம் நூற்றாண்டிலிருந்தே கிறிஸ்தவர்கள் இந்த கடலோர கிராமத்தில் இருந்தாலும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதாம் ஆண்டு மட்டுமே ஒரு குரு இந்த அழகு கிராமத்திலிருந்து திருநிலை படுத்தபட்டார். அந்த தவப்புதல்வன்தான் அருள்தந்தை சி. எம். ஹில்லாரி அவர்கள். இவரது தந்தை திரு. கார்மல் மிராண்டா இந்த அரும்பெரிய இறை அருளுக்கு நன்றிக்கடனாக கிறிஸ்து அரசர் திரு உருவம் ஒன்றை பொது வணக்கத்திற்கு கொடுப்பதாக உறுதி எடுத்துக்கொண்டார். அதன்படி தமக்கு கிடைத்த ஒரு படத்தை சிலை செய்வதில் நிபுணர்களான சம்பக்குளத்து சிர்ப்பிகளுக்கு கொடுத்து இன்று காணும் அழகு சிலையை செய்து வாங்கினார். சாலை வசதிகள் இல்லாது அன்று அச்சிலையை ஓடம் வழியாக வேளிக்கும், பின் அங்கிருந்து நமது திருத்தலத்துக்கும் கொண்டுவந்தார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு அன்றைய கொச்சி ஆயர் ஜோஸ் வியேரா அல்வர்னாஸ் அவர்களால் இன்றைய அதே இடத்திலேயே பிரதிஸ்டிக்கப்பட்டது. அவரே நேரில் ஆண்டவரின் புதுமைகளை தரிசித்து, அனுபவித்து பரவசப்பட்டிருக்கிறார்!
ஆண்டவரின் காலத்து மக்களும் அவரது புதுமைகளை அனுபவித்ததை நற்செய்திகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. மத்தேயு பதினைந்தாம் அதிகாராத்தில் கூறுவது: மலைமேல் ஏறி அமர்ந்த அவரிடம் மக்கள் திரளாக வந்தனர். அவர்களுள் ஊமை, குருடர், மற்றும் ஊனமுற்ற அனைவரையும் அவர் கருணையுடன் குணப்படுத்தினார் என்று. மாற்குவும் தமது ஐந்தாம் அதிகாரத்தில் மருத்துவர் பலரிடம் தனது உடைமைகள் அனைத்தையும் செலவிட்டும், அல்லல் பல பட்டும் குணமாகாத பெரும்பாட்டை அவரது அங்கியின் விளிம்பில் தொட்டபோதே குணமான பெண் ஒருத்தியை காட்டுகின்றார். இந்நிகழ்வுகள்தாம் இன்றைய நோயாளிகளையும், வேதனைப்படும் அனைவரையும் அவர் அண்டையில் கொணர்கின்றது. அவர்களும் நோய் நீங்க ஆறுதல் அடைந்து பூரிப்புடன் வீடு திரும்புவதை இன்றும் வேட்டுகாட்டில் நாம் தரிசிக்கின்றோம்.
'சுமை சுமந்து சோர்ந்திருபபோரே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாற்றி அளிப்பேன்' எனக்கூறியது இன்றும் இத்திருத்தலத்தில் உண்மையாகின்றது. அவரது திரு உருவம் நிறுவப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை எண்ணற்ற பக்தர்கள் அவர் அருள் பெற்று அசீர் பெற்று வளம் பெறறுள்ளனர், வாழ்வு பெற்றுள்ளனர்.
ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் பக்தர்கள் தங்கள் சுமைகளை சுமந்திங்கு வருகின்றனர், சுமை நீங்கி நிம்மதியுடன் திரும்புகின்றனர், நன்றிப்பெருக்குடன் மீண்டும் வருகின்றனர், பிறரையும் கொணர்கின்றனர். அங்ஙனம் அவருக்கு, அவரது அன்புக்கு, கருணைக்கு சட்சியாகின்ற்றனர். அவரது வற்றாத அன்பும் கருணையும் இன்றும் நம்மை அழைக்கின்றது. வருக, அவர் அருள் பெறுக, வளம் பெறுக, வாழ்வடைக, நிறை வாழ்வடைக!
- அருட்பணி கிலாடின் அலக்ஸ், பங்கு தந்தை.

No comments: