Tuesday 16 February, 2010

கிறிஸ்து ராஜ திருத்தலம், வெட்டுகாடு, திருவனந்தபுரம்

அரசருக்கெல்லாம் அரசரான இயேசு கிறிஸ்துவின் தெய்வீக அருள் நிறைந்த திருத்தலமே மாத்ரே-தே-தேவூஸ், வெட்டுகாடு. கேரளா மாநில தலைநகரான திருவனந்தபுரத்தின் மேற்க்கே அரபிக்கடல் தாலாட்ட எழில்கொஞ்ச தவழும் இந்த பங்கு பார்போற்றும் திருத்தலம் என்று கூறுவது மிகையாகாது.
சாதி-மத வேற்றுமை இன்றி மக்கள் தங்கள் வேதனை, சோதனைகளை கிறிஸ்து அரசரின் திருப்பாதத்தில் இறக்கி வைத்து இளைப்பாறுகின்றனர், ஆறுதல் அடைகின்றனர். தீரநோயால் வாடுவோர், பிள்ளைப்பேறின்றி தவிப்போர், வேலையின்றி திண்டாடுவோர், குடும்பத்தில் சமாதானம் இழந்தோர், இன்னபிற மக்கள் அவரை அண்டி வந்து அருள் பெற்று செல்கின்றனர்.
தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அவர் சந்நிதியில் நோன்பிருந்து ஜெபித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது இவரது பக்தர்களின் ஆழமான, அசையா நம்பிக்கை.
வெட்டுகாடு, ஒரு சரித்திர கண்ணோட்டம்:
ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தி நாலாம் ஆண்டு நமது தாய் திருநாட்டின் இரண்டாவது அப்போஸ்தலர் என போற்றப்படும் பிரான்சிஸ்கு சவேரியார் திருவிதாங்கூர் நாட்டிற்கு வருமுன்னமே வேட்டுகாட்டில் ஒரு கிறிஸ்தவ சமூகம் இருந்திருக்கிறது. அவர்கள் ஜெபிக்கவும், வேதம் பயிலவும் புனித அன்னாள் ஜெபக்கூடம் என்ற ஓன்று இருந்ததாகவும் அது தற்போதைய கன்னியர் மடம் இருக்கும் இடத்தில் இருந்ததாகவும் தெரிகின்றது.
நமது தாய் நாடு போன்ற நாடுகளுக்கு மாலுமிகளை வியாபார நோக்குடன் அனுப்பிய போர்த்துக்கீசிய மன்னன், அவர்கள் செல்லும் இடமெல்லாம் கற் சிலுவைகள், ஜெபக்கூடங்கள் நிறுவ கேட்டுக்கொண்டான். அங்ஙனம் அவனது ஆறாவது இந்திய பிரதிநிதி கப்ரான் நிறுவிய கற்சிலுவை வெட்டுகாட்டில் இருந்தாகவும் தெரிகிறது. இதுவே இப்பகுதிகளில் மறை பரப்பிய பிரான்சிஸ்கன் துறவியர்களும் கண்டதாகவும் தகவல்கள் உண்டு. இதே தகவல்களையே சவேரியார் இயேசு சபை ஸ்தாபகரான புனித இன்னாசியாருக்கும் தெரியப்படுத்தியதாகவும், அந்த தகவல் இன்றும் உரோமையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நாள் போக போக, நற்செய்தி விதைகள் வளர்ந்து நூறு மடங்கு அறுவடையாக அப்போதைய ஜெபக்கூடம் போதாமல் வர புதிதாக ஒரு தேவாலயம், ஏறக்குறைய தற்போதைய இடத்திலேயே கடல் நோக்கி கட்டப்பட்டது. தற்போதைய இந்த பெயரும் சவேரியாரே கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். அப்போதெல்லாம் கோவாவை சார்ந்த குருக்களே பங்கு தந்தையர்களாக இருந்திருக்கிறார்கள்.
இன்று நாம் காணும் கோயில் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி ஏழாம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதன் பணி தந்தை மோந்தேரோ அவர்கள் ஆயிரத்து எண்ணூற்றி தொண்ணூற்றி இரண்டாம் வருடம் தொடக்கி வைத்தார்.
ஆலய பெயர்: "மாத்ரே" என்ற போர்த்துக்கீசிய வார்த்தைக்கு 'தாய்' என்றும், "தே தேவூஸ்" எனும் இலத்தீன் வார்த்தைக்கு 'இறைவனின்' என்ற பொருளுண்டு. ஆக இந்த இரண்டு இருமொழி வார்த்தைகளுக்கும் 'இறைவனின் தாய்' எனும் பொருளுண்டு. இதுவே சவேரியார் அளித்த பெயர் என்றும் கூறுகிறார்கள்.
கிறிஸ்து அரசரின் சிறப்பு திருத்தலம், வெட்டுகாடு:

No comments: