Tuesday 3 June, 2008

எனக்கு எல்லாம் நீரே[தொடர்ச்சி]

எனது சுவை நீர்
எனது மணமும் நீர்
எனது ஸ்பரிசம் நீர்
எனது இன்பம் நீர்.

எனது உறவு நீர்
எனது உணர்வு நீர்
எனது கனவு நீர்
எனது தெளிவும் நீர்.

எனது சிந்தை நீர்
எனது செயலும் நீரே
எனது வார்த்தை நீர்
எனக்கு வாய்மை நீர்.

எனது ஆசான் நீர்
எழுத்தும் எழுதுகோலும் நீர்
எனது புத்தகம் நீர்
பொருளடக்கமும் நீர்.

எனது காலையும் மாலையும் நீர்
இரவும் பகலும் நீர்
ஞாயிறும் திங்களும் நீர்
வின்மீன்களும் பால்வீதியும் நீர்.

காலங்களும் பருவங்களும் நீர்
மழையும் வெயிலும் நீர்
பனியும் குளிரும் நீர்
குளிரிலும் .....

எனக்கு கடல் நீர்
கரையும் நீர்
மலை நீர்
மடுவும் நீர்.

என் உள்ளமெல்லாம் நீர்
என் எண்ணமெல்லாம் நீர்
உனையன்றி நானில்லை
உனையின்றி நானில்லையே.



No comments: