Tuesday 3 June, 2008

எல்லாம் நீரே...!

அன்புக்கடவுளே எனக்கு எல்லாம் நீரே

எனக்கு தாயும் தந்தையும் நீர்
ஒளியும் வளியும் நீர்
எனைத் தாங்கும் பூமி நீர்
எனைச்சூழும் ஆகாயம் நீர்.

எனக்கு உண்ண உணவு நீர்
உடுக்க உடை நீர்
படுக்க பாய் நீர்
நடக்க பாதை நீர்.

எனை மூடும் போர்வை நீர்
எனை சூழும் நட்பு நீர்
நான் காணும் கட்சி நீர்
நான் கேட்கும் ஒலியும் நீர்.

எனது சொந்தபந்தம் நீர்
ஆசையும் பாசமும் நீர்
எனது நேற்று நீர்
இன்றும் என்றும் நீரே.

1 comment:

Unknown said...

Thanks for the information I really like your blog posts... specially those on Local Tamil News