Sunday 28 December, 2008

தமிழுக்கும் அமுதென்று பேர்...

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்... (தமிழுக்கும்)

தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் (௨)
இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
பயிருக்கு வேர் (தமிழுக்கும்...)

தமிழ் எங்கள் இளமைக்கு பால்
ஆ ஆ ஆ.......
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க
புலவர்க்கு வேல்... புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்... சுடர் தந்த தேன் ( தமிழுக்கும்...)

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்
வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுறற தீ (௨) (தமிழுக்கும்...)

[பாரதி தாசன்; பி. சுஷீலா; பஞ்சவர்ணக்கிளி]

No comments: