Friday 9 May, 2008

அனைத்தும் கடன்...

அனைத்தும் கடனே வாழ்க்கையில்
அம்மா அப்பாவுக்கு
ஆசிரிய பெருந்தகைகளுக்கு
இன்னும் இயற்கைக்கும்
ஈசனுக்கும் கடனே!

உங்களுக்கும் நண்பர்களே
ஊரார் உலகோருக்கும்
எனதென்று ஒன்றுமில்லை
ஏழ்மைதான் மிச்சம்!

ஐய்யமின்றி சொல்வேன்
ஒருவரையும் மறவேன்
ஓதுவேன் உங்களுக்காக
ஔடதமென கடவுள் காக்க.

No comments: